இந்தியத் தலைநகரில் கடுமை​யான புழு​திப்​புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது!

டெல்லியின் அனைத்​துப் பகு​தி​களுக்​கும் இந்​திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்​திருந்த நிலை​யில், அங்கு கடுமை​யான புழு​திப்​புயல் வீசி​யது.

தலைநகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்​றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும் என்​றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்​றும் துவாரகா பகு​தி​களில் நேற்று பிற்​பகல் 2:30 மணி நில​வரப்​படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசி​யது.

நேற்று காலை​யிலும் டெல்​லி​யில் லேசான மழை பெய்​தது. இமயமலைப் பகு​தி​யில் ஏற்​பட்​டுள்ள திடீர் மேற்​கத்​திய இடையூறு காரண​மாக இந்த மழைப் பொழிவு ஏற்​பட்​டுள்​ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular